Wednesday 3 August 2011

மண்புழு உர


மண்புழு உயிர் உர தொழில்நுட்பம்

முன்னுரை

இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.
மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்

மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.

மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்
  • அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
  • எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
மண்புழு இரகங்கள்

வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.
  • மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
  • மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.
மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை.  இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.
மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே  அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.

2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்

நிலை - 1
மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.
நிலை - 2
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.
நிலை - 3
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.
நிலை - 4
மண்புழு உரம் தயாரித்த பின்பு மண்புழுக்களை பரித்து எடுத்தல் அவசியமாகும். மண்புழு உரத்தை சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும், மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து எடுக்கப்படும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் இடவும்.
நிலை - 5
சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும்.

மண்புழு உர உற்பத்தி முறைகள்

உகந்த மண்புழுவை தேர்ந்தெடுத்தல்

மண்புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழுரகம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மண்ணின் ஆழத்தில் வாழக்கூடிய மண்புழுவானது, மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல. ஆப்ரிகன் மண்புழு (யூடிரிலஸ் யுஜினியே), சிவப்பு புழு (எய்சினியா ஃபோய்டிடா), மக்கும் புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்களாகும். மூன்று மண்புழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்ய முடியும். மற்ற இரண்டை காட்டிலும் ஆப்ரிக்கன் (யூடிரிலஸ் யுஜினியே) புழுவானது மிகவும் சிறந்தது. ஏனெனில் குறைந்த கால இடைவெளியில் அதிகளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்கிறது.

அட்டவணை:1 மண்புழு உரம் தயாரிக்க உகந்த கழிவுகள்
கழிவுகள் கிடைக்கும் இடம்
உபயோகிக்க கூடிய கழிவுகள்
வேளாண் பண்ணைகள்
பயிர் தூர்,களைகள்,வைக்கோல்,உமி,எரு
மலைப் பயிர்கள்
தண்டு,இலைகள்,பழத்தோல்கள்
கால்நடைகள்
சாணம்,மூத்திரம்,சாண எரிவாயு கழிவு
உணவு பதப்படுத்தும் ஆலை
தோல்,ஓடு,உபயோகப்படுத்தாத குழம்பு, காய்கறிகள்
சமையல் எண்ணெய் ஆலை
விதை ஓடு, பிரஸ்மட்
வடிப்பாலை
உபயோகப்படுத்தப்பட்ட கழிவு நீர், பார்லி கழிவுகள்
விதை பதப்படுத்தும் ஆலை
பழங்கள் (மத்திய பகுதி), முளைக்காத விதைகள்
வாசனை திரவியங்கள் ஆலை
தண்டு, இலை, பூக்கள்
தென்னை நார் ஆலை
தென்னை நார்க் கழிவு
மண்புழு உர உற்பத்திக்கான இடம்

மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை உபயோகப்படுத்த முடியும். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும். வெயில் மற்றும் மழையிலிருந்துபாதுகாப்பதற்கு, தென்னைக் கீற்று கூரையை பயன்படுத்தலாம். மண்புழு உர உற்பத்திக்கான குப்பை குவியலை உபயோகமில்லாத ஈரமான சாக்குப்பை கொண்டு மூட வேண்டும்.

மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்

ஒரு சிமென்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். அந்த அறையின் அளவை பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அடிப்பகுதியான தொட்டியானது சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்பு குழி அவசியம். ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் மேலோ சொன்ன முறையில் கட்டமைப்புகளை உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.

மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை

நெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.

கழிவுகளை படுக்கையில் போடும்முறை

பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.
தண்ணீர் தெளிக்கும் முறை

தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது, 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.

மண்புழு உரத்தினை ஊட்டமேற்றுதல்

அசிட்டோபேக்டர், அஸோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா,சூடோமோனாஸ், போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். ஊட்டமேற்றுதல் மூலம் பயிர்ச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் அதிகரிக்கின்றன. மேலும் நன்மை தரும் உயிரினங்கள், ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவிற்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ - பேக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்கு பின் மண்புழு படுக்கையில் சேர்க்கலாம்.

மண்புழு உர அறுவடை செய்முறை

தொட்டி முறையில், மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கையால் மண் புழு கழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம் வரை செய்யவேண்டும். இந்த அறுவடையினை தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான மண்புழு உரத்தினை பெறமுடியும்.
சிறியபடுக்கை முறையில், தகுந்த இடைவெளியில் மண்புழு உர அறுவடை தேவையில்லை. இந்த முறையில் கழிவுகளின் குவிப்பு 1மீட்டர் வரை இருப்பதனால், இந்த கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.

மண்புழு அறுவடை முறை

மண்புழு உரம் தயாரிப்பு முடிந்தவுடன், மண்புழுக்கள் கருவுருதல் முறையில் உரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இம்முறையில் சிறிய மாட்டு சாணப்பந்துகள் உரக்குழியில் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவரப்படுகின்றன. பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தப் புழுக்கள், அடுத்த மண்புழ உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மண்புழு உர பயிர்ச்சத்துக்களின் அளவு

பயிர்ச்சத்துக்களின் அளவானது, நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால், பலதரப்பட்ட பயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே விதமான கழிவுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே அதிக அளவில் இருக்கும். மண்புழு உரத்தில் காணப்படும் பொதுவான பயிர்ச்சத்துக்களின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கரிமச்சத்து
9.5 - 11.98 சதவீதம்
தழைச்சத்து
0.5 - 1.5 சதவீதம்
மணிச்சத்து
0.1 - 0.3 சதவீதம்
சாம்பல்சத்து
0.15 - 0.56 சதவீதம்
சோடியம்
0.06 - 0.30 சதவீதம்
கால்சியம்+மெக்னீசியம்
22.67 - 47.6 மி.இக்/100 கிராம்
தாமிரச்சத்து
2 - 9.5 மி.கிராம்/கிலோ
இரும்புச்சத்து
2 - 9.3 மி.கிராம்/கிலோ
துத்தநாகச்சத்து
5.7 - 11.55 மி.கிராம்/கிலோ
கந்தகச்சத்து
128 - 5485 மி.கிராம்/கிலோ
மண்புழு உர சேமிப்பு முறை

அறுவடை செய்யப்பட்ட மண் புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதைத் தடுக்கலாம். மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதை விட திறந்த வெளியில் சேமிப்பது சாலச் சிறந்ததாகும். திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவிகித ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.

மண்புழு உரத்தின் நன்மைகள்
  • மற்ற மக்கு உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம்.
  • மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
  • இந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது.
  • கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கிறது.
  • திடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால் அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அவைகளின் குணங்கள் மாற்றப்படுகின்றன.
மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்
மண்புழு உரம் உபயோகப்படுத்துதல்

ஒரு எக்டேர் நிலத்திற்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டில்களில் போடப்படும் மண் கலவையில் மண்புழு உரம் 40 சதவிகிதம் கலக்கப்பட்டு பின்பு தொட்டிகளில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன. வளர்ந்த மரங்களான தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ இடவேண்டும். மண்புழு உரத்தை மண்ணில் இடும் பொழுது, மண்ணின் அடிப்பாகத்தில் இடவேண்டும். மண்ணில் மேல் பரப்பில் இடக்கூடாது. மண்ணின் மேல் பரப்பில் இட்டால், மண்புழு உரத்தில் இருக்கும் நன்மைதரும் நுண்ணுயிர்கள் வெயில்படும் பொழுது இறந்து விடும் நிலை உள்ளது.

மண்புழு உரம் தயாரிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை
  • சரியான இரக மண்புழுவை தேர்ந்து எடுக்க வேண்டும்.
  • எல்லா நிலைகளிலும், மண்புழு வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • மண்புழுக்கள் தேவைக்கும் அதிகமாக வளர்ந்துவிட்டால், தேவையான அளவுக்கு போக மீதமுள்ள எண்ணிக்கையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடவசதி இல்லாததால் மண்புழுக்கள் இறந்துவிடும்.

பஞ்சகாவ்யா


பஞ்சகாவ்யா ஒரு அங்கக பொருள். இது செடியின் வளர்ச்சியை உயர்த்தியும் மற்றும் நோய் பற்றாநிலையை கொடுக்கும். பஞ்சகாவ்யாவில் ஒன்பது வகையான பொருட்கள் உள்ளன. அவை பின்வருமாறு மாட்டுச்சாணம், மாட்டு சிறு நீர், பால், தயிர், வெள்ளம், நெய், வாழை, இளநீர் மற்றும் தண்ணீர். இவைகளை சரியாகக் கலந்து பயன்படுத்தினால் அதிசயமான தீர்வைக் காணலாம்.
  • மாட்டுச்சாணம் - 7 கிலோ
  • மாட்டு நெய் - 1 கிலோ
            இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக காலை மற்றும் மாலை நேரங்களில் கலக்கி மூன்று நாட்கள் வரை வைக்கவும்.
  • மாட்டு சிறு நீர் - 10 லிட்டர்
  • தண்ணீர் - 10 லிட்டர்
மூன்று நாட்கள் கழித்து மாட்டு சிறுநீர் மற்றும் தண்ணீரை இதனுடன் கலக்கி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நன்றாகக் கலக்கி 15 நாட்கள் வரை வைக்கவும். 15 நாட்கள் கழித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அதனுடன்  வைத்தால் 30 நாட்களுக்குள் பஞ்சகாவ்யா தயாராகிவிடும்.

2.தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மண் பானை, கற்காரை தொட்டி அல்லது பிளாஸ்டிக் கேன்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் சேர்க்கவும் கொள்கலனை நிழலில் திறந்து வைக்கவும். உட்பொருளை நாளொன்றிற்கு இருமுறை காலையும், மாலையும் கொதிக்க வைக்கவும். 30 நாட்களுக்கு பிறகு பஞ்சகாவ்யா கரைசல் தயாராகிவிடும். இதை தயாரிக்கும் போது எருமையுடைய பொருட்களை கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உள்ளூர் மாடுகளை விட வெளிநாட்டு மாடுகளுக்கு ஆற்றல் அதிகம். இதனை நிழலில் தான்  வைக்கவும். கம்பி வலைக்கண் அல்லது பிளாஸ்டிக் கொசு வலையை அதன் மேல் மூடி வைக்கவும் ஈக்கள் முட்டை இடுவது மற்றும் கரைசலில் ஈ இன காலில்லா புழுக்கள் உருவாவதை தடுக்க(-). கரும்பு சாறு இல்லையென்றால் 500 கிராம் வெள்ளத்தை மூன்று லிட்டர் தண்ணீரில் கலக்கி பயன்படுத்தலாம்.
பஞ்சகாவ்யாவின் இயல்பு வேதிப்பொருள் மற்றும் உயிரியல் பொருட்கள்
வேதிப்பொருள்களின் கூட்டமைப்பு
அமில நிலை
5.45
ஈ.சி டி எஸ்.எம்2
10.22
மொத்த தழைச்சத்து (பிபிஎம்)
229
மொத்த மணிச்சத்து (பிபிஎம்)
209
மொத்த சாம்பல்சத்து (பிபிஎம்)
232
சோடியம்
90
சுண்ணாம்புச்சத்து
25
ஐ.ஏ.ஏ.(பி.பி.எம்.)
8.5
ஐி.ஏ.(பி.பி.எம்.)
3.5
நுண்ணுயிரி சுமை
பூசணம்
38800 மி.லி
பாக்டீரியா
1880000 மி.லி.
லேக்டோபேசில்லஸ்
2260000/மி.லி.
மொத்த காற்றில்லாச் சுவாச உயிரி
10000/மி.லி.
அமிலம்
360/மி.லி.
மெத்தனோஜென்
250/மி.லி.
பஞ்சகாவ்யாவின் இயல்பு வேதிப்பொருள் மற்றும் உயிரியல் பொருட்களில் முக்கியமான ஊட்டப்பொருள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள் (IAA & GA) உள்ளன. நுண்ணுயிரியை நொதித்தல் அதாவது ஈஸ்ட், லேக்கேடாபேசில்லஸ் இணைந்து அமில நிலையை குறைத்துவிடும். பால் பொருட்கள் மற்றும் வெள்ளம்/கரும்பு சாறினை சேர்த்தால் வளர்வதற்கு உருதுணையாக இருக்கும்.

லேக்டோபேசில்லஸில் நன்மை பயக்கும் வளர்ச்சிதைப்பில் உருவாகும். அவை பின்வருமாறு அங்கக அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் எதிர் உயிரிப்பொருள்களை உருவாக்கும். இவை மற்ற நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிக்கு எதிர்ப்பாக செயலாற்றும். ஜி.சி.-எம்.எஸ். பகுப்பாய்வில் உள்ள கூட்டுகள் பின்வருமாறு, கொழுப்பு அமிலம், அல்க்கேன், அல்கோனால் மற்றும் அல்கஷால்
வ.எண்.
கொழுப்பு அமிலம்
அல்க்கேன்
அல்கோனால் மற்றும் ஆல்கஹால்
01.
ஒலிக் அமிலம் டெக்கேன் ஹெப்டனோல்
02.
பால்மிட்டிக் அமிலம் ஆக்டேன் டெட்ராகாசனோல்
03.
மிரிஸ்டிக் ஹெக்சாடிக்கேன் ஹெக்சாடிகனோல்
04.
டிகோனோர் ஒரிடிக்கேன் ஆக்டாடிகனோல்
05.
டெக்கனாமிக் மெத்தனால்
06.
ஆக்டனோயிக் ப்ரொப்னால், ப்யுட்டனால் மற்றும் எத்தனால்
07.
ஹெக்சனோயிக்
08.
ஆக்ட்டாடிக்கனோயிக்
09.
டெட்ராடிக்கனோயிக்
10.
அசிட்டிக், ப்ரோப்பியோனிக், ப்யுட்டிரிக், கேப்ராயிக் மற்றும் வலரிக் அமிலங்கள்

3.வணிகப் பயிரில் பஞ்சகாவ்யாவின் நன்மை பயக்கும் விளைவுகள்
  • பெண் பூக்களில் அடர்ந்த பூக்கள் உருவாவதற்கு தூண்டப்படும்
  • ஒழுங்கற்ற அல்லது மாறி அமைந்த தாங்கியின் வழக்கம் இதில் ஏற்படாது. இது பூக்களில் மட்டுமல்லாது பழங்களிலும் தான்.
  • 12 நாட்கள் வரை அரையுடைய வெப்பநிலையில் வைத்தால் நல்ல தரத்தை அதிகப்படுத்த உதவும்.
  • நறுமணம் மற்றும் மணம் அதிக அளவில் இருக்கும்
எலுமிச்சை:
  • வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பூக்கள் பூர்த்துக் கொண்டே இருக்கும்
  • பழங்கள் நல்ல மணத்துடனும், சதையுடனும் இருக்கும்
  • 10 நாட்களுக்கு இதனுடைய வாழ்வு உயர்த்தப்படும்
கொய்யா:
  • அதிகப்படியான மொத்த தின்மக் கரைசல்
  • ஐந்து நாட்களுக்கு இதனுடைய வாழ்வு உயர்த்தப்படும்
வாழை:

(3% கரைசல் (100 மி.லி.) நீர்ப்பாசன தண்ணீர் (-) கரைசலுடன் தெளித்து  ஆண் மொட்டுக்களை அகற்றிய பின் குலையின் கொப்பூழுடன் சேர்த்து கட்டவும். குலையின் அளவு ஒரே சீராக இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை செய்யப்பட்டிருக்க வேண்டும். மேல் மற்றும் கீழே உள்ள கைகள் ஒரே சீராக பெரியதாக இருக்கும்.

மஞ்சள்:
  • 22% மகசூல் அதிகமாகும்
  • மஞ்சளின் அளவு பெரியதாக  இருக்கும்
  • குறைந்த வடிகால் சேதாரம்
  • தாய் மற்றும் விரல் வேர்த்துண்டுகளின் விகிதம் குறுகி இருக்கும்
  • தும்பி, சிலந்தி ஆகிய பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்து நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தப்படும்
  • தாய் விதை வேர்த்துண்டுகளை தவணைக் கட்டணத்தில் விற்கப்படுகின்றன
  • மஞ்சளின் உட்பொருள்களை அதிகப்படுத்த உதவும்
மல்லிகை:
  • அதிகப்படியான மணம் மற்றும் நறுமணம்
  • மொட்டுப் புழுக்களின் பாதிப்பு இருக்காது
  • வருடம் முழுவதும் பூக்கள் பூர்த்துக் கொண்டே இருக்கும்
காய்கறிகள்:
  • மகசூல் 18% உயர்ந்து காணப்படும். சில சமயங்களில் வெள்ளரியின் மகசூல்  இரட்டிப்பாகக் காணப்படும்.
  • ஆரோக்கியமான காய்களின் மேல் தோல்கள் பளபளப்பாக இருக்கும்
  • இதனுடைய வாழ்வு நீட்டிக்கப்பட்டிருக்கும்
  • காய்கள் நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்
  • பொதுவாக பஞ்சகாவ்யாவை அனைத்து பயிர்களுக்கும் 30% அளவு தழை தெளிப்பாக பயன்படுத்தப்படுகின்றது ( 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலக்கவும்).

4.பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவு
தெளிக்கும் முறை
கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும்.
மின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப்படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும்.

பாய்வு முறை
பஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 50 லி/ஹெக்டர் என்ற அளவில் கலந்து சொட்டுப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.

விதை நாற்று நேர்த்தி
நடவு செய்வதற்கு முன்பு விதைகளை முக்கி வைக்க அல்லது நாற்றுகளை அமுக்கி வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது. 20 நிமிடங்கள் முக்கி வைத்தால் போதும், மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்த்துண்டுகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் முக்கி வைக்க வேண்டும்.

விதை சேமிப்பு
விதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் முக்கி வைக்கவும்.
1.
முன் பூர்க்கும் பருவம்
15 நாட்களுக்கு ஒரு முறை, பயிரின் கால இடைவெளி பொருத்து 2 தெளிப்பு தெளிக்கவும்
2.
பூக்கும் மற்றும் இரு புறமும் வெடிகனி பருவம்
10 நாட்களுக்கு 2 தெளிப்பு
3.
பழம்/இருபுறமும் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அடையும் பருவம்
பழங்கள் வெடித்து முதிர்ச்சி அமையும் போது ஒரு முறை தெளிக்கவும்
வெவ்வேறு பயிர்களில் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தப்படும் காலநிலை பின்வருமாறு
பயிர்
கால அட்டவணை
நெல்
10,15,30 மற்றும் 50வது நாட்களில் நாற்று நடுவதற்கு முன்பு பயன்படுத்தவும்
சூரியகாந்தி
விதைத்தபின் 30, 45 மற்றும் 60 வது நாட்களில் தெளிக்கவும்
உளுத்தப்பருப்பு
மானாவாரி: முதல் பூர்ப்பிற்கும், பூர்த்தி பின் 15 நாட்கள் கழித்தும் பயன்படுத்தவும்
நீர்ப்பாசனம்: விதைத்தலுக்கு பின் 15, 25 மற்றும் 40வது நாட்களில் தெளிக்கவும்
பச்சைப்பயிறு
விதைத்தலுக்குப் பின் 15, 25, 30, 40 மற்றும் 50 வது நாட்களில் பயன்படுத்தவும்
ஆமணக்கு
விதைத்தலுக்குப் பின் 30 மற்றும் 45வது நாட்களில் பயன்படுத்தவும்
நிலக்கடலை
விதைத்தலுக்குப் பின் 25 மற்றும் 30வது நாட்களில் பயன்படுத்தவும்
வெண்டை
விதைத்தலுக்குப் பின் 30,45, 60 மற்றும் 75வது நாட்களில் பயன்படுத்தவும்
முருங்கை
பூர்ப்பதற்கு முன்பும் மற்றும் இரு புறமும் வெடிக்கனி உருவாகும் நேரத்திலும் பயன்படுத்தவும்
தக்காளி
நாற்றங்காலில் இருக்கும் பொழுதும் விதைத்த பின் 40வது நாளிலும் பயன்படுத்தவும் 1% கரைசலில்12மணி நேரத்திற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும்
வெங்காயம்
விதைத்தலுக்கு பின் 0,45 மற்றும் 60வது நாட்களில் பயன்படுத்தவும்
ரோஜா
கவாத்து செய்யும் போதும், மொட்டுகள் வெளி வரும் போதும் பயன்படுத்தவும்
மல்லிகை
மொட்டு அரும்பும் போது பயன்படுத்தவும்
வனிலா
கரணைகளை விதைப்பதற்கு முன் பஞ்சகாவ்யாவில் முக்கி வைக்க வேண்டும்
பஞ்சகாவ்யாவின் பயன்கள்
இலை
பஞ்சகாவ்யாவை செடியின் மேல் தெளித்தால் பெரிய இலைகள் மற்றும் அடர்த்தியான மேற்கவிகையை உருவாக்கும். ஒளிச்சேர்க்கை முறை உருவாகி உயிரியல் திறன், கருத்தொகுப்பு அதிகளவ வளர்ச்சிதை மாற்றத்தை மற்றும் ஒளிச்சேர்க்கையை இயங்கச் செய்யும்.

தண்டு
அடிமரத்தின் அருகில் தண்டுகள் உருவாகும். அவைகள் வலிமையாகவும் மற்றும் அதிகப்படியான பழங்களை முதிர்ச்சியடையச் செய்யும். கிளைகள் பெரியதாகி வளரும்.

வேர்
வேர்கள் மட்டுமீறியும், அடர்த்தியாகவும் இருக்கும் வேர்கள் நிறைய நாட்களுக்கு நன்றாகக் காணப்படும். இந்த வேர்கள் ஆழமாக உட்சென்று பரவி வளர்ந்து காணப்படும்.  இவ்வகையான வேர்கள் அதிகப்படியான தண்ணீர் மற்றும் சத்துப்பொருட்களை உழ்  இழுக்கும்.

மகசூல்
நிலங்களில் அங்கக வேளாண்மையிலிருந்து கரிம மற்ற அமைப்பிற்கு மாற்றினால் இயல்பான சூழலை விட மகசூல் குறைவாகக் காணப்படும். முதன் முதலாக அறுவடை செய்த பிறகு கரிமமற்ற பயிர் வளர்ப்பு அமைப்பில் இருந்து அங்கக பயிர் வளர்ப்பாக நிலங்களை மாற்றும் பொழுது பஞ்சகாவ்யா அனைத்துப் பயிர்களின் மகசூலை பழைய நிலைக்கே மாற்ற உதவும். 15 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடை செய்ய உதவும். இது காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களின் வாழ்வு காலத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் சுவைகளையும் அதிகப்படுத்தும்.  விலை உயர்ந்த இரசாயனங்களை குறைத்தால் பஞ்சகாவ்யா அதிகப்படியான இலாபத்தையும், அங்கக விவசாயிகளின் கடன் தொகைகளிலிருந்து விடுவிக்க உதவும்.

கடினத்தன்மையுடைய வறட்சி
இலைகள் மற்றும் தண்டுகளின் மேல் மெல்லியதாக சவ்வு போன்று உருவாகும். இதனால் நீராவி ஆகுதல் குறைந்துவிடும். செடிகளில் உருவாகும் ஆழமான மற்றும் விரிவான வேர்கள் வறண்ட காலங்களில் அதிகமான நாட்கள் தாங்கி நிற்கும். மேலே உள்ள இரண்டு காரணிகளும் 30% நீர்ப்பாசனத்தை குறைத்து கடினத்தன்மையுடைய வறட்சியை உறுதிப்படுத்தும்.

5.விலங்குகளின் நலத்திற்கு பயன்படும் பஞ்சகாவ்யா
நுண்ணுயிரி, பாக்டீரியா, பூஞ்சாண், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின், நொதிப்பொருள், வளர்ச்சி ஊக்கக் கூறு, நுண்ணூட்டச்சத்து, எதிர் உயிரியமாக்கி மற்றும் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகியவைகளுக்கு பஞ்சகாவ்யா முக்கியமாகத் திகழ்கின்றது.
விலங்குகள் மற்றும் மனிதர்களில், பஞ்சகாவ்யாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் முழுத்தடுப்பாற்றலை தூண்டி, உடம்பினுள் கொண்டு செல்லும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகப்படியான நோய் எதிர்ப்பொருளை உருவாக்கும். இது நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை போல் செயல்படும். பஞ்சகாவ்யா விலங்குகள் மற்றும் மனிதர்களின் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும். நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, குணப்படுத்த உதவும். முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக வைத்திருக்க உதவும். பஞ்சகாவ்யாவில் இருக்கும் காரணிகள் பசியார்வம், ஜீரணத்தன்மை, தன்மயாதல் மற்றும் நச்சுத்தன்மையை உடலில் இருந்து அகற்றுதல் உதவி புரியும். மலச்சிக்கலை முழுமையாகக் குணப்படுத்திவிடும். விலங்குகள் மற்றும் மனிதர்களின் முடி மற்றும் தோல்கள் ஆரோக்கியமாக இருக்கும் எடை கூடும்.

பன்றி
பன்றியினுடைய வயது மற்றும் எடையைப் பொருத்து பஞ்சகாவ்யாவை குடிநீரில் கலக்கி ஒரு பன்றிக்கு 10 மி.லி.யில் இருந்து 50 மில்லி வரை கலக்கி ஊட்ட வேண்டும். பன்றிகள் திடமாகவும்,நோய் தாக்குதல் இல்லாமலும் இருக்கும். விரைவாக எடை கூடும். இதனால் பன்றி உரிமையாளர்களுக்கு தீனியின் செலவு குறைந்து எடையும் கூடி அதிகப்படியான இலாபம் கிடைக்கும்.

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு
ஆடுகளின் வயதைப் பொருத்து ஒரு நாளைக்கு ஒரு ஆட்டிற்கு 10.மி.லி.யில் இருந்து 20.மி.லி. வரை பஞ்சகாவ்யாவை கொடுத்தால் அதனுடைய எடை குறுகிய காலத்தில் அதிகமாகி, திடமாகவும் இருக்கும்.

மாடுகள்
மாடுகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மாட்டிற்கு 100 மி.லி. பஞ்சகாவ்யாவை தீனியிலும், தண்ணீரிலும் கலந்து கொடுத்தால் மாடுகள் திடமாகவும், பால் உற்பத்தி அதிகமாகவும், கொழுப்பும் அதிகமாகி காணப்படும். கருக்கொள்ளுதலின் எண்ணிக்கை அதிகமாகும்.
கருஇணையம், பால்மடி வீக்கம். பாதம் மற்றும் வாய் நோய்களைக் குறைத்துவிடும். மாடுகளின் தோல்களில் நிறைய முடிகளுடனும், மினு மினுப்பாகவும் அழகாகத் தோன்றும். வேலி போடுவதற்கு முன் உலர்ந்த புற்களின் மேல் யூரியாவை தெளிப்பதற்கு பதிலாக சில விவசாயிகள் 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலை தெளிப்பார்கள். அடுக்கடுக்க உலர்ந்த புற்கள் புளித்துப் போகும். மாடுகளுக்கு பஞ்சகாவ்யா தெளிக்காத புற்களை விட இந்த வகையான உலர்ந்த புற்களையே மாடுகள் விரும்புகின்றது.

கோழி
தினமும் தீனியிலோ அல்லது குடிநீரிலோ ஒரு பறவைக்கு 1.மி.லி. என்ற அளவில் கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இல்லாமல், திடமாக இருக்கும் அதிக காலங்களுக்கு முட்டைகள் இடும். பிராய்லர் குஞ்சுகளின் எடை அதிகமாகும். எடையில் நிலை மாற்றத்தின் விகிதம் அதிகமாகக் காணப்படும்.

மீன்
மீன் குளங்களில் பஞ்சகாவ்யாவை தினமும் மாட்டு சாணத்தில் கலந்து வைக்கவும். இது பாசிகள், களைச்செடிகள் மற்றும் சிறு புழுக்கள் குளத்தினுள் அதிகமாக உருவாகும். இது மீன்களுக்கு உணவுகளை அதிகப்படுத்தும். குளத்தினுள் தேவையான இடைவெளியில் சுத்தமான நீரை மட்டுமே சேர்க்க வேண்டும். சுத்தமான நீரை விடவில்லை என்றால் நீரில் மீன்களுக்கு தேவையான உயிரியம் இல்லாமல் போய்விடும் ற்றும் பாசிகள், களைச்செடிகள், இதர உயிரிகளின் வளர்ச்சி குறைந்துவிடும். எந்திர குலுக்கியையும் நீரில் உயிரியத்தின் அளவை அதிகப்படுத்தப் பயன்படுத்தலாம். 10 மாதத்தில் மீன்களின் எடை இரண்டிலிருந்து மூன்று கிலோ வரை எடை கூடும். இதனால் விரலளவு வளர்ந்த மீன்களின் இறப்பு விகிதம் குறைந்து மீன்களின் எடை கூடும். இதனால் மீன் வளர்ப்பதில் அதிக இலாபம் காணலாம்.

6.மனிதர்களின் நலத்திற்க பயன்படும் பஞ்சகாவ்யா
ஒரு பெண்மணியின் உடல் முழுவதும் உள்ள நமட்டுச் சொறிக்கா ஆங்கில மருந்தை ஒன்றரை ஆண்டுகளாக எடுத்து வந்தார். அவருடைய பண்ணையில் பஞ்சகாவ்யாவை முழங்கையில் பயன்படுத்தி வந்தார். 15 நாட்களுக்கு பிறகு அவருடைய முழங்கையில் உள்ள நமட்டுச் சொறி முழுவதுமாக சரியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடல் முழுவதும் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தினார். 21 நாட்களில் நமட்டுச் சொறி முழுவதுமாக மறைந்து விட்டது.

மருந்தளவு
50 மி.லி வடிகட்டிய பஞ்சகாவ்யாவை 200 மி.லி. தண்ணீர், இளநீர் அல்லது பழச்சாறுடன் கலந்து காலையில் வெறு வயிற்றில் குடிக்கவும். இது அனைத்து வகையான நோய்களுக்கும் உபயோகமாகும்.

எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி
எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. தாக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஜீரண சக்தியும், பசியார்வத்தை கொடுத்து எடை கூட உதவும். நன்றாக தூங்க உதவும். அவர்களுடைய காய்ச்சல், இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் நைவுப்புண்கள் ஒரு மாத சிகிச்சைக்குள் இந்த நோய்கள் குறைந்துவிடும். இதனால் சிலர் பண்ணையில் வேலை செய்கிறார்கள். சிலர் அவர்களுடைய சொந்த வேலைகளை செய்கிறார்கள். அவர்களுடைய இரத்தப் பரிசோதனையில் எய்ட்ஸ் நோய் உறுதியாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எய்ட்ஸ் நோயின் தடயம் இல்லாமல் இயல்பான திடமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

நமட்டுச் சொறி
நமட்டுச் சொறி விரைவாக குணமாகும். நைவுப்புண்கள் 6 மாதத்திற்குள் மறைந்துவிடும். படை, மற்ற தோல் சுழற்சி விரைவாக குணமாகும்.

நரம்பு சீர்குலைவு
நரம்பு சீர்குலைவு அதாவது உடல் நடுக்கம் உடைய நோயாளிகளுக்கு பஞ்சகாவ்யாவை கொடுக்கலாம். இதனால் கை நடுக்கம், தலை சுற்றுதல் அனைத்தும் குறைந்துவிடும். இதனால் தினமும் எடுக்கும் மருந்தினை குறைத்துக் கொள்ள உதவும்.

சர்க்கரை நோய்
50 மி.லி. வடிகட்டிய பஞ்சகாவ்யாவை தினமும் காலையில் வெறு வயிற்றில் குடித்து வந்தால் இரத்ததில் உள்ள சர்க்கரையை குறைத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போடும் சர்க்கரை நோய் எதிர்ப்பில் மருந்தினை குறைத்துக் கொள்ள உதவும். பொதுவாக பலமில்லாமல் இருப்பது, அசீரணம், மலக்கட்டு, பாதத்தில் எரிச்சல் தன்மை ஆகியவை ஒரு மாதத்திற்குள் குறைந்துவிடும். அவர்கள் சுறுசுறுப்பாகவும், திடமாகவும் இருப்பார்கள்.

காசநோய்
இதனை நோய்த்தடுப்பாற்றல் மருந்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும். காய்ச்சல் ஒரு வாரத்திற்குள் குறைந்துவிடும். இருமல் இரண்டு வாரத்திற்குள் குறைந்துவிடும். பசியார்வம் கூடும். உடலின் எடை அதிகமாகும். நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை பயன்படுத்துவது ஒரு மாதத்திற்குள் குறைந்துவிடும்.

மூட்டு வீக்கம்
மூட்டு வலி, வீக்கம், கடினத்தன்மையை முழுமையாகக் குறைத்துவிடும். மூட்டு வீக்கம் 2 மாதத்திற்குள் குணமாகிவிடும்.
திடமானவர்கள் மேலும் திடமாகவும், சக்தி வாய்ந்தவர்களாக இருக்கவும் பஞ்சகாவ்யாவை எடுத்துக் கொள்கின்றனர்.